உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:கருநாடக இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தொகு  

கருநாடக இசை வலைவாசல்


வீணை வரைபடம்
வீணை வரைபடம்

கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


தமிழ் இசைச் சங்கம் என்பது தமிழிசையை வளர்க்கும் நோக்குடன் 1943 ம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் பிறமொழிப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தமிழ் இசைக்கு நிலையான அமைப்புசார் ஆதரவை வழங்கும் நோக்குடன் இது தொடங்கப்பட்டது. இதனை அண்ணாமலை செட்டியார் அவர்கள் தொடங்கினார்கள். இன்று "தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இசை மேதைகளை ஒருங்கிணைக்கும் சங்கமாகவும், இசை வல்லுநர்களை உருவாக்கும் கல்லூரியாகவும் தமிழ் இசைச் சங்கமானது விளங்கி வருகின்றது. தமிழ்ப் பண் ஆராய்ச்சியில் பெரும் பங்கினை தான் தம் பெரும் தமிழ்ச் சேவையால் தக்கவைத்துக் கொண்டுள்ளது."

தொகு  

பகுப்புகள்


கருநாடக இசை பகுப்புகள்


தொகு  

கலைஞர்கள்


எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • கருநாடக இசை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கருநாடக இசை தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • கருநாடக இசை தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கருநாடக இசை தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கருநாடக இசை தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் பாடலில் இடம்பெறும் வகையில் எழுதுவர். அச்சொல் முத்திரை என அழைக்கப்படும்.
  • ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • மோர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 3ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம்.
தொகு  

சிறப்புப் படம்


{{{texttitle}}}

தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த ஒரு வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, இவர் திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.

படம்: User:
தொகுப்பு


தொகு  

திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு


பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மலைக்கோயில் வாசலில்... நடபைரவி இளையராஜா மனோ, சுவர்ணலதா வீரா
பாட்டும் நானே பாவமும் நானே... கௌரிமனோகரி கே. வி. மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் திருவிளையாடல்
கொஞ்சநாள் பொறு தலைவா... ஆனந்தபைரவி தேவா ஹரிஹரன் ஆசை
தொகு  

செய்திகளில் கருநாடக இசை


விக்கிசெய்திகளில் கருநாடக இசை வலைவாசல்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்தமிழ்
தமிழ்
தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ் தமிழர் தமிழ்நாடு இந்தியா இலங்கை
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.chped.com/w/index.php?title=வலைவாசல்:கருநாடக_இசை&oldid=1833687" இலிருந்து மீள்விக்கப்பட்டது