1,000 மிமீ (3 அடி 33⁄8 அங்) 1,435 மிமீ (4 அடி 81⁄2 அங்)
மலேசிய தொடருந்து போக்குவரத்து (ஆங்கிலம்: Rail Transport in Malaysiaமலாய்: Pengangkutan Rel Malaysia); சீனம்: 马来西亚铁路运输) என்பது மலேசியாவின் தொடருந்துகள் போக்குவரத்து சேவையைக் குறிப்பிடுவதாகும். இந்த தொடருந்து போக்குவரத்து 1885-ஆம் ஆண்டு சூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
கனரக தொடருந்துகள் பெரும்பாலும் நகரங்களுக்கு இடையிலான சேவைகள்; சரக்கு போக்குவரத்து; மற்றும் சில நகர்ப்புறப் பொது போக்குவரத்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நகர்ப்புற பொதுப் போக்குவரத்திற்காக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்கள் (Rapid Transit Rails) பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டிலேயே மிக நீளமான ஒற்றைத் தண்டவாள (Monorail) பாதை; கோலாலம்பூரில் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரே இழுவை ஊர்தி (Funicular) தொடருந்து பாதை பினாங்கில் பயன்படுத்தப்படுகிறது.
மலேசிய தொடருந்து போக்குவரத்து அமைப்பு தீபகற்ப மலேசியாவின் 11 மாநிலங்களில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கியது. கிழக்கு மலேசியாவில், சபா மாநிலத்தில் மட்டுமே தொடருந்து போக்குவரத்து உள்ளது.