மரம் நடுதல்
Appearance
மரம் நடுதல் என்பது விதைகளை, அல்லது கன்றுகளை நடுதல் ஆகும். மரம் நடுதல் பல தரப்பட்டோரால் பல நோக்கங்களுக்காகச் செய்யப்படுகிறது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தென்னை, பனை, மா, பலா, வேம்பு மரங்களை வீட்டுச் சுற்றத்தில் நட்டு வளர்ப்பர். காடுகளை மீள் உருவாக்குவதற்காக, நிலத்தை மீள்பதப்படுத்துவதற்காக மரம் நடுவர். வணிக நிறுவனங்கள், இலாப நோக்கமற்ற நிறுவனங்களும் மரம் நடுதலில் ஈடுபடுகின்றன.