உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மநாப தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மநாப தீர்த்தர்
அம்பியில் அமைந்துள்ள பத்மநாபரின் பிருந்தாவனம் (சமாதி)
பிறப்புதற்போதைய ஆந்திரப் பிரதேசம் அல்லது வட கர்நாடகா [1]
இயற்பெயர்சோபன பட்டா
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்
குருமத்துவர்

பத்மநாப தீர்த்தர் (Padmanabha Tirtha) (இறப்பு:1324) இவர் ஓர் துவைத அறிஞரும், மத்துவாச்சாரியரின் சீடருமாவார். மத்துவருக்குப் பிறகு இவர் தனது படைப்புகளின் முதன்மை வர்ணனையாளராக பணியாற்றினார். அவ்வாறு செய்யும்போது, மத்துவரின் சிக்கலான எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் எழுத்து முறையை கணிசமாக தெளிவுபடுத்தினார். 14 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி ஜெயதீர்த்தரால், மேற்கொள்ளபட்ட அடிப்படை தத்துவ சிக்கல்களைக் கண்டறியும் துவைத நூல்களை விரிவாக்குவதில் இவரது முன்னோடி முயற்சிகள் இருந்தன. [2] துளு நாட்டுக்கு வெளியே துவைதத் தத்துவத்தை பரப்பிய பெருமையும் இவருக்கு உண்டு . [3]

வாழ்க்கை[தொகு]

நாராயண பண்டிதரின் மத்வ விஜயம் என்ற நூலில் கூறியுள்ளபடி, இவர் சோபனாபட்டா என்ற ஊரில் பிறந்த ஒரு திறமையான அறிஞரும் தர்க்கவியலாளரும் ஆவார். அறிவார்ந்த கருத்து பெரும்பாலும் இவர் பிறந்த இடத்தை வடக்கு கர்நாடகா பகுதிக்கு வைக்கிறது. [4] ஒரு விவாதத்தில் மத்துவரால் வென்ற பிறகு, இவர் துவைதத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் துணைக் கண்டம் முழுவதும் புதிய தத்துவத்தை பரப்புவதற்கு மத்துவரால் நியமிக்கப்பட்டார். [3] இவர் இறந்த பிறகு, அம்பிக்கு அருகிலுள்ள நவ பிருந்தாவனத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது சீடர் நரஹரி தீர்த்தர் இவருக்குப் பின் மடத்தின் தலைவராக இருந்தார்.

படைப்புகள்[தொகு]

தற்போதுள்ள 15 படைப்புகள் இவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை மத்துவரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் ஆகும். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் நயரத்னாவளி, மத்துவரின் விஷ்ணு தத்வ விநிர்னயம், சத்திரகதிபாவளி பிரம்ம சூத்திர பாஷ்யத்தைப் பற்றிய ஒரு விவரிப்பு மற்றும் அனு வியாக்யானம் பற்றிய சன்னாயரத்னாவளி ஆகியவை அடங்கும். [5] ஜெயதீர்த்தர் பின்னர் பத்மநாபாவின் கருத்துக்களிலிருந்து விலகிச் சென்றாலும், பிந்தையவரின் முன்னோடிப் பணியை அவர் தனது நயா சுதாவில் புகழ்ந்து கூறுகிறார்.' மேலும் இவரது செல்வாக்கை ஒப்புக்கொள்கிறார். பத்மநாபரின் செல்வாக்கை வியாசதீர்த்தரும் ஒப்புக்கொள்கிறார். அவர் தனது தாத்பர்ய சந்திரிகாவில், ஜெயதீர்த்தர் மற்றும் பத்மநாபரின் கருத்துக்களை சரிசெய்ய முயற்சிக்கிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. Sharma 2000, ப. 223.
  2. Sharma 2000, ப. 294.
  3. 3.0 3.1 Wilson 1876, ப. 82.
  4. Sharma 2000, ப. 293.
  5. Sharma 2000, ப. 295.

நூலியல்[தொகு]

  • Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120815759. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Wilson, H.H (1876). Sketch of Religious Sects of the Hindus. Bishop's College Press. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=பத்மநாப_தீர்த்தர்&oldid=3019669" இலிருந்து மீள்விக்கப்பட்டது