சுகதேவ் (எழுத்தாளர்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுகதேவ் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தூத்துக்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது இயற்பெயர் ப. இளையபெருமாள். பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றிருக்கும் இவர் தினமணி நாளிதழில் 19 ஆண்டுகள் வரை பணியாற்றினார். கடைசி ஆறு ஆண்டுகள் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பு இதழான தினமணிக் கதிர் வார இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தற்போது சென்னையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
எழுதி வெளியாகியுள்ள நூல்கள்[தொகு]
- இலக்கிய வெளி - மருதா பதிப்பகம் (டிசம்பர் 2003).