குரோ-மாகுநன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/Cro-Magnon.jpg/220px-Cro-Magnon.jpg)
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/59/Silex_cromagnon_fond.jpg/220px-Silex_cromagnon_fond.jpg)
குரோ-மாகுநன்(Cro-Magnon) (ஒலிப்பு: /kroʊˈmæɡnən/, பிரான்சிய மொழி: kʀomaɲɔ̃) என்பது தற்கால மாதர் உடல் போன்ற வளர்ச்சியுற்ற, ஐரோப்பிய பழைய கற்கால மாந்தனைக் குறிக்கும். இச்சொல் ஏறத்தாழ 40,000 ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரையிலும் பழமை வாய்த ஒரு குறிப்பிட்ட மாந்த இனத்தின்தொல்லுயிர் எச்சங்களைக் குறிக்கும். குரோ-மாகுநன் என்னும் இப்பெயர் தற்கால பிரான்சு நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குரோ-மாகுநன் என்னும் குகையில் முதன் முதலாக இவ்வகை தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்டது.
உடலமைப்பு[தொகு]
குரோமாக்னரின் உடலமைப்பு வட அமெரிக்க இந்தியர்கள் போலிருந்துள்ளது. இவர்கள் பழுப்பு நிறத்தவராக அகன்ற முகமும், நெடிய உருவமும், நீண்ட மூக்கும் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் நீக்ரோ இனத்தவராகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
வாழ்க்கை முறை[தொகு]
இவர்கள் வேட்டையாட ஈட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர். மாமூத் என்கின்ற காட்டுயானைகளையும் இரெயின்டீர் என்ற கலைமான்களையும் காட்டெருமைகளையும் வேட்டையாடினர். குதிரைகளை வீட்டு விலங்காய்ப் பழக்கினர். ஓவியம் வரைதலில் வல்லவர்களாக இருந்தனர். எருதுகள், குதிரைகள், கலைமான்கள், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றைக் குகைகளிலிலும் பாறைகளிலும் வரைந்தனர். ஓவியம் வரைய மாங்கனீசையும் இரும்பு ஆக்சைடையும் பயன்படுத்தினர். இவர்களுடன் பழைய கற்காலம் முடிவுற்றது. இதன் பின் புதிய கற்காலம் பிறந்தது.
புதிய கற்கால மாற்றங்கள்[தொகு]
புதிய கற்காலத்தில் மனிதன் கையடக்கமான கருவிகளைப் பளபளப்புடன் கூர்மையாகவும் தயாரித்தான். வேளாண்மை, சமைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், நெசவுத் தொழில்நுட்பம், காட்டு விலங்குகளைப் பழக்கி வேட்டு விலங்குகளாக்குதல், மீன்பிடித்தல் முதலியவை புதிய கற்கால மனிதன் அறிந்தவை. இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கவும், புதைத்த இடத்தில் ஒரு படுக்கைக்கல் அமைத்து நினைவுச் சின்னம் வைக்கவும் தொடங்கினர். கதிரவனையும் மூதாதையரையும் தெய்வமாக வழிபட்டனர். போர்களில் வெற்றி ஏற்படின் கொண்டாடவும், நல்ல விளைச்சலுக்காக மனிதப் பலியிடவும் கற்றுக்கொண்டனர். இம்மக்களே நமது முன்னோராகக் கருதப்படுகின்றனர்.