உள்ளடக்கத்துக்குச் செல்

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நெடுவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (Panchayat union elementary school, Neduvasal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளி ஆகும். இங்கு 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னிறைவு பெற்ற தொடக்கப்பள்ளியாக திகழ்கிறது. தற்போது 4 புதிய கட்டிடங்கள், 3 ஆசிரியர்கள், 86 மாணவர்கள் என பள்ளி வளர்ச்சி அடைந்துள்ளது.[1]

பள்ளியின் செயல்பாடுகள்[தொகு]

  • மொழி ஆய்வகத்தின் மூலம் மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொழி ஆய்வகம் உள்ள ஒரே அரசுத் தொடக்கப்பள்ளி இதுவே ஆகும்.
  • கணினி மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது.
  • சமுதாயத்துடன் இணைந்த பள்ளியாக செயலாற்றுகிறது.[2]
  • 10 நட்சத்திர விருதுபெற்ற பள்ளியாகவும் இப்பள்ளி திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆச்சரியப் பள்ளி: கிராமத்தோடு சேர்ந்து வளரும் நெடுவாசல் அரசு தொடக்கப் பள்ளி". Hindu Tamil Thisai. 2017-10-09. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  2. "நெடுவாசல் பள்ளி ஆண்டுவிழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2015/Mar/31/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-1091438.html. பார்த்த நாள்: 21 June 2024.