தாவுத் அலி மிர்சா
Appearance
தாவுத் அலி மிர்சா (Dawood Ali Mirza - பிறப்பு 23 செப்டம்பர் 1907 இறப்பு 21 ஆகஸ்ட் 1986), இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். மாநிலங்களவை உறுப்பினராக சென்னை மாகாணம் சார்பாக 1956 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.
பிறப்பும் கல்வியும்[தொகு]
தாவுத் அலி மிர்சா 23 செப்டம்பர் 1907 இல் நவாப் ரசா அலி கான் பகதூரின் மகனாக அன்றைய சென்னை மாகாணத்தின் மசூலிப்பட்டிணத்தில் பிறந்தார். பி.ஏ படித்துள்ள இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அரசியல்[தொகு]
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 11-12-1956 முதல் 2-4-1962 வரை மாநிலங்களவையில், தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1]
குடும்பம்[தொகு]
தாவுத்திற்க்கு ருக்கையா மிர்சா என்கிற ஷா பேகம் என்ற மனைவி உள்ளார்.[2]
இறப்பு[தொகு]
தாவுத் 21 ஆகஸ்ட் 1986 அன்று உயிரிழந்தார்.